டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 கேள்வித்தாள் கணிப்பு படியுங்க!

 கேள்வித்தாள் கணிப்பு :
கடந்த ஐந்து அல்லது மூன்றாண்டுகள் கேள்வித்தாள்கள் நன்றாக படிக்க வேண்டும் அதனை வைத்து கேள்விகளுக்கான முன்னுரிமைகள் தொகுக்க வேண்டும். அனைத்தும் படிக்க வேண்டும் தான் ஆனால் முன்னுரிமை முக்கியமானது உதாரணமாக குருப் 2  முதன்மை தேர்வில் வெற்றி பெற 200 கேள்விகளிள்  100  கேள்விகள் மொழிப்பாடத்தில் எனில் அதற்கு முன்னுரிமை கொடுத்து கட் ஆஃபில் பலர் வெல்கின்றனர். இவ்வாறு டிரிக்குகள் எனப்படும் நுணுக்கம் அறிந்து செயல்பட வேண்டும்.


அடுத்த கவனம் செலுத்த வேண்டியது பொது அறிவு பாடப்பகுதி கேள்விகள் எது அதிகப்படியான எண்ணிக்கை கொண்டது எது எனில் நடப்பு மற்றும் அதனுடன் இணைந்த ஜிகே கேள்விகள் 15 முதல் 20 கேள்விகள், பின் அறிவியல் 15  கேள்விகள்  இடம் பெற்றிருக்கும் இதன்படி பார்த்தால் குருப் 2  தேர்வில் உங்கள் வசம் 45 கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள் தெரிந்துவிட்டது. மேலும் 25 கேள்விகள் கணிதம், திறனாய்வு போன்ற பகுதிகளில் கேட்கப்படுகின்றது கிட்டத்தட்ட 65 கேள்விகள்  எதிலிருந்து வரும் என்ற கணிப்பு  கிடைத்துவிட்டது.  மீதம் வரலாறு, பொருளியல், புவியியல், இந்திய அரசியலமைப்பு பகுதிகளில் 10 முதல் 15 வரை ஒவ்வொறு பாடங்களிலும் ஏற்றம் இறக்கங்களுடன் கேள்விகள் இருப்பினும் 10 முதல் 20 கேள்விகள் நிச்சயம் அமையும். இவற்றிலும் முந்தய  ஆண்டு  கேள்வித்தாளை நன்கு ஆராய்ந்தால் தவிர்க்க முடியாத கேள்விகள் எப்பாடங்களில் கேட்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

ஒரு சிறிய உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பு பகுதியில் அடிப்படை உரிமைகள்,கடமைகள், முகவுரை, அரசியலமைப்பு உருவாக்கம் இவற்றில் நிச்சயம் இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன கேள்விகள் மாறுபடலாம் ஆனால் குறிப்பிட்ட பாடங்களில் கேள்வி அமைவது உறுதி, இவற்றை கணித்து செயல்ப்பட்டால் வெற்றி உறுதி இனி வரும காலங்களில் சிலேட்குச்சி இந்தியா  தளம் தொடர்ந்து இவற்றை விளக்கும் .

பாடங்களில் சொந்த குறிப்பு, சிலேட்குச்சி இந்தியா தளம் போன்ற இணைய குறிப்புகள், பொதுஅறிவு புத்தகங்களின் குறிப்புகள் போன்றவற்றை தொகுத்து வைக்க வேண்டும் தொடர்ந்து அவற்றை ரிவைஸ் செய்ய வேண்டும். மேலும் கேள்விகள் உருவாக்கி விடை தருவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும் அல்லது சிலேட்குச்சி தளம் போன்ற இணைய கேள்விகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் நாளிதழ்களிள் கேள்விகள் தரப்படுகின்றன அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். சுய பரிசோதனை எனப்படும் செல்ஃப் டெஸ்ட் நம்மை மேம்படுத்தும் தேர்வில் வெற்றி பெற வைக்கும். ஆகவே உங்களது வெற்றிக்காக தொடர்ந்து படியுங்கள் சிலேட்குச்சி.

கேள்வித்தாள் குறிப்பு :
முந்தைய ஆண்டு கேள்விகள் அடங்கிய புத்தகங்கள் எளிதாக கிடைக்கின்றன . அவற்றை பாடவாரியாக பெறலாம். அவற்றை தொடர்ந்து சேகரிக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். படித்தலுடன் அவற்றை டெஸ்ட் மூலம் நினைவு கொள்ள வேண்டும். மேலும் சிலேட்குச்சி தொடர்ந்து கேள்வித்தாள் வழங்கும். தினசரி சில கேள்விகளை பயிற்சியில் வழங்கும் அவற்றை தொடர்ந்து படியுங்கள் வெற்றிப் படிகள் உங்களுக்காக காத்து நிற்கின்றன பயணியுங்கள்.

“விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் வருமா வீட்டுகுயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா “ என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள் இடம் , சூழல் கருதி செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் .

சுய படிப்பு :
டிஎன்பிஎஸ்சியை பொருத்தவரை சுயப்படிப்பு என்பதுதான் மிகுந்த அவசியாமாகும். ஆனாலும் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல கூடாது என்றும் கூற இயலாது. இருப்பினும் பயிற்சி நிறுவனங்கள் செல்ல இயலாதவர்களுக்கு  இணையங்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையங்கள் எவ்வாறு படிக்க வேண்டுமென ஒரு சிறப்பு பயிற்சி அளிக்கின்றன. அதுவே டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல போதுமான வளங்களாகும். போட்டி தேர்வை எதிர்கொள்ளும் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், அகடமிகள், வெற்றி பெற்ற மாணவர்கள் மூலம் தகவல்கள் பெற்று சிலேட்குச்சி இந்தியா தளம் வழங்குகிறது. இதனை அனைத்து பொதுதேர்வுக்கு தயாரகும் மாணவர்களும் படித்து பயன் பெற வேண்டும் . 

படிக்கும் வழிமுறைகள் :
குரூப் ஒன் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருக்குமான ஒன் இந்தியா வழங்கும் டிப்ஸ்கள் எவ்வாறு படிக்க வேண்டும், அதனை எவ்வாறு தேர்வில் அப்ளை செய்ய வேண்டும், போன்ற விளக்கங்களுடன் கடுமையான உழைப்பு சுமார்ட் ஒர்க் கொஞ்சம் உபயோகித்தால் போதுமானது ஆகும். படிக்கும் நேரங்கள் தேர்வு எழுதுவோரின் சவுகரியம் பொருத்து முடிவு செய்யலாம். வேலை செய்து படிப்பவர்கள் தினமும் 100 கேள்வி பதில்கள் உடன் இயன்ற பாடங்கள் தினசரி 2 மணி நேரமாவது படிக்க வேண்டும். படிக்கும்போது ஒருமணி நேரத்திற்கொரு முறை ஐந்து நிமிட இடைவேளை தர வேண்டும்.

ஹாக்கிணி, தர்மசக்கரம் போன்ற யோக முத்திரைகள் செய்யலாம் மூளை நன்கு சுறுசுறுப்படையும். தொடர்ந்து படிக்க முடியும் மேலும் படித்தவற்றை திருப்பி பார்க்கவும் முடியும். கீ வோர்ட்ஸ் எனப்படும் வார்தை ஜாலங்கள் வைத்து படித்தால் எளிதில் குறிப்புகளை நினைவில் கொள்ளலாம். ஆண்டுகள் நினைவில் கொள்ள நிகழ்வுகளை நமக்கு பிடித்த தலைவர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் பிறந்ததினம், வருடத்துடன் ஒப்பிட்டு நினைவு கொள்ள வேண்டும் .


மேலும் படிக்க:

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கான ஆதி முதல் அந்தம் வரை தேர்வு விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத  அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளுடன் விவரங்கள்!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான தேர்வு  முறை விளக்கங்கள்! 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க முறை படியுங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான  பதவிகள், சம்பளம் மற்றும்  படிகள்!

Post a Comment

0 Comments