ஈஸ்ட் பவர் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

அரசின்  கீழ் இயங்கும் ஈஸ்டர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ளோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆந்திராவில் பணியிடம் கொண்டது.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2,859 ஆகும். மேலும்  காலியிட விவரங்களை கிழே கொடுத்துள்ளோம்.
வில்லேஜ் செக்ரடேரியட் பிரிவில் 2177 பணியிடங்கள், 
 வார்டு செக்ரடேரியேட் பிரிவில் 682 பணியிடங்கள், 


இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க வயது வரம்பாக  18 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக  பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதற்கு  நிகரான படிப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரிகல், ஒயர்மேன் ஆகிய ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 
மேலும்  எலக்ட்ரிகல் டொமஸ்டிக் அப்ளையன்சஸ் ரீவைண்டிங், 
எலக்ட்ரிகல் ஒயரிங் அண்டு காண்டிராக்டிங், 
எலக்ட்ரிகல் ஒயரிங் அண்டு சர்வீசிங் எலக்ட்ரிக் அப்ளையன்சஸ் பிரிவில் வொகேஷனல் டிரெய்னிங் படிப்பு முடித்தவர்களும் நிபந்தனைகளின் கீழ்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.200   செலுத்த வேண்டும்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஈஸ்ட் பவர்  துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  இறுதி தேதி  : 17.8.2019 ஆகும்.
தேவைப்படும் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.: https://www.apeasternpower.com/

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments