மத்திய அரசின் பவர் கார்பரேசனில் வேலை வேண்டுமா !

மத்திய அரசின்  நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அணுசக்திப் பிரிவின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்., நிறுவனம் அங்கு காலியாக இருக்கும் பல்வேறு காலியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்  உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.


காலியிட விபரங்கள்:
 ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவிலான சயிண்டிபிக் அசிஸ்டென்டில் டிப்ளமோ இன் மெக்கானிக்கலில் 3 பணியிடங்கள், 
டிப்ளமோ இன் எலக்ட்ரிகலில் 2 இடங்கள், 
பி.எஸ்சி.,யில் 1 இடம்
பிரிவு 1 டிப்ளமோ இன் மெக்கானிக்கலில் 9 இடங்களும், 
இதே பிரிவு எலக்ட்ரிகலில் 4 இடங்களும், 
எலக்ட்ரானிக்சில் 5 இடங்களும், 
கெமிக்கலில் 10 இடங்களும், 
பி.எஸ்சி., கெமிஸ்ட்ரியில் 6 இடங்களும், 
சிவிலில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பாக 3.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள்  இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக விண்ணப்பிக்கும் பிரிவின் அடிப்படையில் இன்ஜினியரிங் டிப்ளமோவில் உரிய டிரேடு பிரிவில் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., படிப்பை இயற்பியல் மற்றும் வேதியியலில் முடித்தவர்கள் அந்தந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகஸ்ட்  3, 2019 ஆகும்

 மேலும் தேவைப்படும் விபரங்கள் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்:www.npcil.nic.in
மேலும் படிக்கவும்:

Post a Comment

0 Comments