பத்தாம் வகுப்பு படித்த 12 ஆயிரம் பேருக்கு மத்திய நேரு யுவகேந்திராவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையான நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

நேரு யுவகேந்திரா அமைபின் சார்பில் வெளியிட்டுள்ள  அறிவிக்கையில்  நேரு யுவகேந்திராவில்,  தேசிய இளையோர் தொண்டராகப் பணியாற்றுவதற்கு 18 முதல் 29 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள்  விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை  12 ஆயிரத்துக்கு மேல்   அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூபாய் 5000 மாதம் வழங்கப்படும் அடிப்படை கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டியது அவசியம்.  உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என அறிவிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறலாம் மார்ச் 3, 2019 வரை விண்ணப்பிக்கலாம். 


 மேலும் படிக்க:

Post a Comment

0 Comments