இயற்கையான கற்றாழை டை தயாரித்து பயன்படுத்தி அழகு பெறுவோம்!

 இன்றைய காலகட்டத்தில்  ஆண்கள் மற்றும் பெண்கள் வயது வேறுபாடின்றி முடியானது நரைத்துக் காணப்படுகின்றது. அதிக மன அழுத்தம் மற்றும்  ஆரோக்கிய உணவு குறைவு  போன்றவற்றால் ஏற்படும் தலைமுடி சார்ந்த நரைப் பிரச்சனைக்கு இயற்கையான  முறையினைக் கொண்டு நாம் டை தயாரித்து பயன்படுத்துவோம்.

வீட்டிலேயே இயற்கையான முறையில் டை செய்யும் முறையைப் பின்பற்றித் தலைமுடியை இயற்கையான முறையில் கருமை படுத்துவோம்.

கெமிக்கல் இல்லாமல் பயன்படுத்தும் இயற்கையான டையினால் தலைமுடியைப் பாதுகாப்பதுடன் வேறுவிதமான சிக்கல்களிலிருந்து முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

நம் வீட்டிலேயே டை செய்யத் தேவையான பொருட்கள் இரும்பினான சிறிய கடாய், அலோ வேரா ஜெல், சிறிய வெங்காயம், வெந்தயம், திரிபலா பொடி.
ஆலோவேரா ஜெல்லினை நடுவில் இரண்டாகப் பிளந்து அவற்றின் இடையிலே வெந்தயங்க்ளை வரிசைப்படுத்தி ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும் அல்லது 12 மணி நேரம் ஊற வைக்கலாம். பின் மீண்டும் எடுத்துப் பார்த்தாள் ஆலோவேரா மடலின் இடையில் உள்ள வெந்தயம் நன்கு ஊறி முளைவிட்டிருக்கும். பிறகு கற்றாழை ஜெல்லுடன் ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அக்கலவையுடன் திரிபலாப் பொடியை கலந்து சிறிய இரும்பு சட்டியில் எட்டு மணி நேரம்  அல்லது பத்து மணி நேரம் வைக்கலாம். மேலும்  இரவு நேரத்தில் செய்பவர்கள்  இரவு முழுவதும் இரும்புச்சட்டியில் கலவையைத் தட்டில் மூடி வைத்து அடுத்த நாள் பார்த்தாள் இரும்புச் சட்டியுடன் அந்தக் கலவை வேதிவினை புரிந்து நிறம் மாறிக் கருமையாக இருக்கும் அவற்றுடன் நான்கு அல்லது ஐந்து சிறிய வெங்காயத்தை துருவிச் சாற்றினை எடுத்து கலவையில் கலக்கலாம். இதனால் கலவை நீர்மைத் தன்மை பெறும் சிறிய வெங்காயத்தில் உள்ள சல்பர் முடிக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இந்த இயற்கையான பதத்தில் உள்ள கலவையைத் தலையில் வெள்ளை முடி பகுதிகளில் தேய்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் குளிக்கலாம் இவ்வாறு மாதத்திற்கு மூன்று அல்லது 4 முறை செய்துவந்தால் அவற்றின் நிரந்தர மாற்றத்தினை பார்க்க முடியும்.


தொடர்ந்து நான்கைந்து முறை பயன்படுத்தி வந்தாள் அதன்பின்பு மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானதாகும்.

இயற்கையான  டை கலவையானது தலைமுடி நரையை போக்கும், நல்ல பயனைப் பெறலாம் இதனால் எந்தப் பக்கவிளைவும் ஏற்படாது மேலும் தலைமுடிக்கு ஆரோக்கியம் மற்றும் போஷாக்கும் பெற்று முடியைக் கருமையாக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்தும்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments