டிஎன்பிஎஸ்சியில் வரைவாளர் கிரேடு 3 பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரைவாளர் துறைக்கான கிரேடு 3  பிரிவில்  காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ளோர் அக்டோபர் 30, 2018 முதல் நவம்பர் 28, 2018 வரை விண்ணப்பிக்க்கலாம். 

டிராப்ட்ஸ் மேன் பணியிடங்களுக்கு மொத்தம் அறிபிக்கப்பட்டுள்ள் பணியிடங்கள் எண்ணிக்கை 53 ஆகும். 

பணியின் பெயர்
வரைவாளர் பணி
வயது வரம்பு
35 வயது வரை
கல்வித் தகுதி
உயர்கல்வியுடன் டிப்ளமோ
பணியிடங்கள் எண்ணிக்கை
53
சம்பளம்
ரூபாய் 35,400-1,12,400
பணியிடம்
தமிழ்நாடு


கல்வித் தகுதி:
டிஎன்பிஎஸ்சியின் வரைவாளர் பணிக்கு விண்ணப்பிக்க உயர்கல்வி பாடத்துடன் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற திட்டமிடலில் டிப்ளமோ முடித்திருக்கு வேண்டும்.   

தொழில்நுட்ப கல்வி பயிற்சி  மாநில வாரியம் மூலம் வழங்கப்படும் சிவில்  பொறியியல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை: 
எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 



சம்பளம்: 
டிஎன்பிஎஸ்சியில் தேர்ந்தெடுக்கப்படுவோர்கள் ரூபாய் 35,400 முதல் ரூபாய் 1,12,400  வரை மாதச் சம்பளம் பெறலாம். 

 வயது:
டிஎன்பிஎஸ்சியின் வரைவாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுபிரிவினர் 30 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.  மற்ற பிரிவினர் 35 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனின் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.  அக்டோபர் 30 முதல் 2018 முதல் நவம்பர் 28, 2018 வரை விண்ணப்பிக்கலாம். 

கட்டண தொகை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க   கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். 

தேர்வுக்கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். மேலும் டிஎன்பிஎஸ்சியில் முதல் முறையாக விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்  பதிவு கட்டணமாக தேர்வுக்கு  ரூபாய் 150 செலுத்த வேண்டும். 

முக்கிய  நாட்கள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 30-10-2018  ஆகும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 28, 2018 ஆகும். 
தேர்வு நாள்: 
தாள் 1: பிப்ரவரி 3, 2019 முதல்
காலை 10 முதல் 1.000 மணி வரை
தாள் 2: பிப்ரவரி 3, 2019   மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை


மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments