ஐந்தாண்டு திட்டங்களின் தொகுப்பு அடங்கிய பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 6!

பொருளாதாரப் பாடங்கள் வழ்க்கையில் போட்டி தேர்வில்  வெற்றி பெற படித்துக் கொண்டிருக்கும்  தேர்வர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ஆறாவது ஐந்தாண்டு திட்டம்: 1980- 1985

நாட்டு வருமானம், தொழிநுட்ப நவீனம், வறுமையை ஒழித்தல், வேலையின்மை ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்ப்பட்டது இந்தியாவின் ஆறாவது ஐந்தாண்டு திட்டம்.

ஏழாவது ஐந்தாண்டு திட்டம்:  1985- 1990
உணவு பொருட்களின் விளைச்சலை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பினை உண்டாக்க வேண்டும்.

ஆண்டுத் திட்டம் 1990-1992
1991 இல் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற கொள்கையை புகுத்தி உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் 3ஆம் இடம் வரை பெருக்கம் அதிகரித்தது.

பொருளாதார சாதனைகள், பொருளாதார வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உற்பத்தித் துறை வளர்ச்சி, ஏற்றுமது மற்றும் இறக்குமதி வளர்ச்சி வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்பாக செயல்பட திட்டங்கள் இடப்படட்ன. 

 ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் 1997-2002
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவின் பொன்விழா சுதந்திர தின கொண்டாட்ட காலங்கள் ஆகும். 

வாழ்க்கைத்தரம். வேலைவாய்ப்புகள், பிரதேச சமநிலை தன்னிரைவு பெற வாழ்க்கையில் இந்தியா குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றது.  



பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல் விலையை நிலைப்படுத்துதல்,

வேளாண்மை ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமாய் அளிப்பதோடு உற்பத்திதிறன் வேலைவாய்ப்பு வறுமை ஒழிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 

பத்தாம் ஐந்தாண்டு திட்டம் 2002- 2007

சமூக நீதி சமத்துவம் இத்திடட்த்தின் நோக்கமாக இருந்தது. 

தலா வருமானத்தை  பத்து ஆண்டு காலத்தில் இருமடங்காக உயர்த்துதல். 
ஆண்டுக்கு  10 மில்லியன்  வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் 
 அனைவருக்கும் கல்வி அளித்தல். 

சர்வ சிக்ஷா அபியான்  அனைவருக்கும் கல்வித்திட்டம் 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

தகுதியுள்ள  குழந்தைகள் அனைவரையும் 2003 ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளில் சேர்த்தல் வேண்டும். 

2007 ஆம் ஆண்டில் அவர்களுக்கு 5 ஆண்டு கல்வியினை நிறைவு செய்தல்

 பதினோராம் ஐந்தாம் திட்டம்: 2007- 2012
மொத்த உள்நாட்டு  உற்பத்தியினை இலக்கு 9%  வரை உயர்ந்தது. 
வேளாண்த்துறையின் பங்கினை 4 % வீதம் உயர்த்துதல். 
படித்து வேலையில்லாதாரின்  எண்ணிக்கையை 3% குறைத்தல்
பன்னிரெண்டாம் ஐந்தாண்டு திட்டம்: 
புதுடெல்லில்யில் 2012 டிசம்பர் 2017 அன்று பிரதமர் மன்மோகன்  சிங் தலைமையில்  நடைபெற்ற முதல் மந்திரிகள் அடங்கிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டது. 

சராசரி வளர்ச்சி வீகிதத்தை 8% உயர்த்தப்பட்டது. 5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள் கட்டமைப்புகளை உருவாக்குதல், உள் கட்டமைப்புத்துறையில் முதலீடுகளை அதிகரித்தல் ஆகியவை 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்காக கொண்டுள்ளது. 

ஒரு நாடு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மேலும் அது கடந்து வரவேண்டிய ஒன்றாக இருப்பது  வறுமை ஆகும். மக்களுக்கு வேலையின்மையால் வருமானம் ஈட்டுவது என்பது சவாலான ஒன்றாகும்.

வறுமை குறைந்தபட்ச வாழ்க்கை  தரத்தை அடைய முடியாத திறனற்ற  நிலையை குறிக்கின்றது. வறுமையினை முழு வறுமை, ஓப்பிடு வறுமை, தற்காலிக வறுமை முற்றிய வறுமை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை ஆகியவை அடங்கும்.

மக்களுக்கு போதுமான உணவு, உடை, உறைவிடம் இல்லாத நிலையை குறிக்கும்.
ஓப்பீட்டி வறுமை என்பது மக்களின் பல்வேறு குழுக்களிடையே  காணப்படும் வேறுபாடுகளையோபல நாடுகளில் வாழும்  மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளை குறிப்பது ஆகும். 

தற்காலிக வறுமை முற்றிய வறுமை: 

இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை குறைவினால் விவசாயம் பொயுத்து அதனால் உழவர்கள் தற்காலிகமான ஏழ்மை நிலையில் உழல்கிறார்கள். அதே நிலையில் அவர்கள் நீண்ட காலமாக வாழும் போது அந்நிலையை முற்றிய வறுமை என அழைக்கப்படுகின்றன. 

முதல் நிலை, இரண்டாம் நிலை வறுமைகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை விளக்குகிறார். முதல்நிலை வறுமை என்பது குடும்பங்களில் வாழ்க்கை நடத்த மொத்த சம்பாத்தியங்களைக் கொண்டு குறைந்தபட்ச பற்றாக்குறையான நிலையைக் குறிக்கும். 

இரண்டாம் நிலை வறுமை என்பது குடும்பங்களின் சமாபாத்தியம் வாழ்க்கை நடத்த போதுமானதாக  இருக்கும். 

கிராமப்புற ஏழ்மை மற்றும் நகர்ப்புற ஏழ்மை: 
கிராமங்களில்  வாழும் பெரும்பான்மையான ஏழை மக்கள் நிலங்களை சொந்தமாக  பெற்றிராமல் விவசாயக் தினக்கூலிகளாக வேலைச் செய்கிறாகள். கூலி குறைவாக பெறுவார்கள். 

சுரேஷ் டெண்டுல்கர் பரிந்துரைத்த கணக்கு முறைப்படி தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு சர்வே எடுத்து அதன் அடிப்படையில் திட்டக்குழு வறுமைக்கோடு அறிவிக்கையை வெளியிட்டது. 
நாட்டின் குடிமகன்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு நிதி ஆண்டில் 100 நாட்கள் வேலை பெறப்படுகிறது. 

ரங்கராஜன்  தலைமையில் புதிய கமிட்டி டாக்டர் சி. ரங்கராஜன் புதிய கமிட்டியை அமைத்து புதிய கணக்கெடுக்கும் முறையை படிந்துரை செய்யதார்.

மேலும் படிக்க:

தேசிய வளர்ச்சி கழகத்துடன் ஐந்தாண்டு திட்டங்கள் அடங்கிய பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 5!

Post a Comment

0 Comments