பத்தாம் வகுப்பு பாசா உங்களுக்கு தொழிலாளர்த்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு லேபர் டிபார்ட்மெண்டில்  காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிற்துறையில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின்  எண்ணிக்கை 16 ஆகும்.தமிழ்நாடு பொதுசார்நிலை முத்திரை கொல்லர் பணிக்கு தகுதியுடையோர்  அரிய வாய்ப்பை பயன்படுத்துங்க. 



அலுவலக பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது அடைந்தவர்கள் முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். பொது பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர்கள் 32 வயதும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருப்பவர்கள்  இப்பணியை பெறலாம். முன்னாள் ராணுவத்தினர் எனில் 53 வயதுவரையுள்ளோர் பணியைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். மாற்று திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்புடன்   கூடுதலாக 10 ஆண்டுகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 


பணியின் பெயர்
முத்திரை கொல்லர்
வயது வரம்பு
18 வயது 30 வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
16
சம்பளம்
ரூபாய் 15,900 முதல் 50400
பணியிடம்
தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பித்தவர்கள் மெரிட் முறையில் தகுதியானவர்கள்  நேரடி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் பணியிடம்  இருக்கும். 
சம்பளத் தொகையாக ரூபாய் 15, 900 முதல் 50400 ரூபாய் வரை பெறலாம். 

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை தொழிற்துறையில் அதிகாரபூர்வ  தளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டு தொழிற்துறையில் விண்ணப்பிக்க 26.9.2018 வரை ஆன்லைனில்  அறிவிக்கை படிவம் பெற்று பூர்த்தி செய்து நேரிலோ தபாலிலோ அனுப்பலாம். 

கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ்கள், சாத்ச் சான்றிதழ்கள், வேலைவாய்பு அட்டை. புகைப்படங்கள், விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும். 

சான்றிதழ் நகலுடன் அனுப்ப  வேண்டிய  முகவரி:
 கூடுதல் தொழிலாளர் ஆணைய அலுவலகம் 
 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாக முதல் தளம். 
எல்லீஸ் நகர்,
மதுரை 625016



மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments