எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  எஸ்பிஐயில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை   67 சிறப்பு கேடர் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன (ஒப்பந்த அடிப்படையில்)
 
 எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு படி  விண்ணப்பதாரர்களின் வயது 25 முதல் 37 வரை இருக்க வேண்டும். 
 
கல்வித் தகுதியாக  பட்டதாரியாக இருத்தல் வேண்டும் என்பது வங்கிப் பணிக்கான தகுதிகள் ஆகும்.

ஸ்பெசல் கேடர் ஆபிசர் பணிக்கு  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத  வருமானமாக ரூ. 42020-1310,  பெறலாம்.  
 
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர். தேர்வுக்கான தகுதி பட்டியல் நேர்காணலில் மட்டும் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இறங்கு வரிசையில் தயாரிக்கப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும்
நியமனம் பெற இந்திய குடிமகனிடமிருந்து ஆன்-லைன் விண்ணப்பத்தை அழைக்கிறது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2019 முதல் 06.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு பெற இங்கே  கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்.  https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/14102019Website%20Detailed%20Advertisement%20SCO-2019-20-16.pdf

 ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். https://recruitment.bank.sbi/crpd-sco-2019-20-16/apply
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments