பள்ளி மாணவர்களுக்கான கல்வித் உதவித்தொகை பெறும் வாய்ப்பு!

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி உதவித் தொகை மூலம்   பயன்பெற    சிறுபான்மை மாணவர்களுக்கா உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி, புத்த மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற  தகுதியுடைய மாணவர்கள் ஆவார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 

11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் அல்லது ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலைப் படிப்புகள் உள்பட பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலுவோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை  பெறுவதற்கு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூரவ தள லிங்கினைப்   இங்கு கொத்துள்ளோம் கிளிக்  செய்து பெறவும், w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n

2019-20 ஆம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் 1,35,127 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகையானது அந்தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படும். 
உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பள்ளி மாணவர்கள் அக்டோபர் 15, 2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம், வருமானச் சான்றிதழ்,  புகைப்படம் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.  மேலும் விவரங்கள் பெற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில்  மாவட்டப் பிற்ப்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அறியலாம்.

Post a Comment

0 Comments