பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே நாட்டின் மிகிப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இத்தகைய ரயில்வே நிறுவனத்தில்   தென் கிழக்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ரயில்வ் நிறுவனத்தில் ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் பிரிவினருக்கான சிறப்புக் காலியிடங்களான அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 10 ஆகும். இப்பணிகளுக்கு  தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது வரம்பானது 18 முதல் 38 வயதுக்குள்  இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக பிளஸ் 2வில்  குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பில் ஆர்டிசன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும்  ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் தொடர்பான சிறப்புத் தகுதியும் தேவைப்படும்.



தேர்ச்சி முறையானது  எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கங்களை அதிகாரபூர்வ தளத்தில் டவுன்லோடு செய்து அதனை  பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்தின்படியே, விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தேவைப்படும் இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அஞ்சலில்  அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 தொகையினை செலுத்த வேண்டும்.
தி அஸிஸ்டெண்ட் ஆபிசர்,
ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல்,
பங்களா நம்பர் 12ஏ,
கார்டன் ரீச்,
கொல்கட்டா
700043
பிஎன்ஆர் சென்ரல் ஹாஸ்பிட்டல் (லேண்ட் மார்க்)


விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய இறுதி தேதி ஆகஸ்ட், 5, 2019 ஆகும்.

தேவைப்படும் தகவல்கள் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விவரங்கள் பெறலாம் : www.rrcser.co.in

மேலும் படிக்க:
 இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்கள்!,,

Post a Comment

0 Comments