இந்தியாவின் 500 வது கிரிக்கெட் வெற்றியுடன் போனஸ் கோலியின் 40 வது சதம் !


இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் தனது 40 வது சதத்தை பதிவு செய்தார். அதிக சதங்கள் அடித்த கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்க்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார். இன்னும் 10 சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முந்தி விடுவார்.

இந்தியா அணிக்கு எப்பொழுதும் தனது முழு அர்பணிப்போடும் ஆக்ரோஷத்தோடும் விளையாடும் நம்ம கேப்டன் கோலிக்கு மட்டுமின்றி இந்தியா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவர்க்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வாக நேற்றைய போட்டி அமைந்தது. நாக்பூரில் நேற்று இந்தியா அணி பெற்ற வெற்றியானது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 500 வது வெற்றியாகும். இந்தியாவின் 500 வது வெற்றியின் போது கோலி இந்தியா அணிக்கு துணையாக நின்று அணிக்கு வெற்றி தேடித்தந்தது மட்டுமின்றி அவரது 40 வது சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். கிங் கோலி மிக விரைவிலேயே 50 வது சதத்தை எட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். சிலேட்டுகுச்சியின் சார்பாக இந்தியா கிரிக்கெட் அணிக்கும் கேப்டன் கோலிக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க:

இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

Post a Comment

0 Comments