உலக கோப்பை 2019ற்கான சிலேட்டுகுச்சி இந்திய கனவு அணி!




ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. உலக கோப்பையை வெல்ல சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். நமது நாட்டில் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் ஓவ்வொரு வீரருக்கும் மாற்று வீரர் நிச்சயம் வேண்டும். போட்டி நடப்பதோ இங்கிலாந்தில் அங்குள்ள மைதானங்களோ வேக பந்துவீச்சாளர்கள் உதவியாக இருக்கும். 
உலகின் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. நமது சிலேட்டுகுச்சியின் 15 பேர் கொண்ட இந்திய அணி

1) ரோஹித் சர்மா
2) ஷிகர் தவான்
3) விராட் கோலி ( கேப்டன் )
4) லோகேஷ் ராகுல்
5) எம் எஸ் தோனி (விக்கெட் கீப்பர் )
6) ஹார்டிக் பாண்டிய
7) கேதர் ஜாதவ்
8) புவனேஸ்வர் குமார்
9) ஜஸ்பிரிட் பும்ரா
10) குலதீப் யாதவ்
11) யுஸ்வேந்தர் சாஹல்
12) மொஹம்மது ஷமீ 
13) ரவீந்திர ஜடேஜா
14) அம்பத்தி ராயுடு
15) விஜய் சங்கர்

ஏன் இந்த 15 பேர்?

இந்திய அணியில் அதிக பந்து வீச்சாளர்கள் தேவை. அவர்கள் பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் இழந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

குறுகிய வடிவிலான போட்டியில் யார் வேண்டுமானாலும் தோற்கலாம். ஆனால் அதற்கான காரணம் நம்மிடம் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். மாறாக மற்றொரு வீரர் இருந்தால் முடிவு நம் வசமாகி இருக்கும்.

அதேபோல் மாற்று வீரரும் தேவை என்பது ஆகும். நடுவில் ஒரு பந்து வீச்சாளர் காயம் அடைந்துவிட்டால் அவருடைய 10 ஓவர் நாம் முடித்தாக வேண்டும். இதை எல்லாம் மனதில் வைத்தே இந்த அணி தேர்வு செய்யப்பட்டது.

வரும் போட்டிகளில் நம் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரை 4 வது இடத்தில் ஆட வைத்து அவருடைய பேட்டிங் திறனை சோதனை செய்து பார்க்க வேண்டும். அவரை போன்ற ஒரு ஆல் ரவுண்டர் அணியில் இருப்பது நிச்சயம் வலு சேர்க்கும். இந்திய அணி உலக கோப்பை 2019 ஐ வெல்லும் என்று இந்திய மக்களின் வாயிலாக சிலேட்டுகுச்சி வாழ்த்துகிறது. 

மேலும் படிக்க:

இந்தியாவின் 500 வது கிரிக்கெட் வெற்றியுடன் போனஸ் கோலியின் 40 வது சதம் !

Post a Comment

0 Comments