வாழ்க்கையில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் !

மனித வாழ்கையில்  நாம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ரகசியம். நாம் முன்னோர்கள் பயன்படுத்திய ரகசியம்  உலகின் வெற்றியாளர்களின் சூத்திரம் எதுவென்று தெரியுங்களா, அதுதான் ஆழ்மன  ஆற்றல்.

Source: Internet

இவ்வுலகில் பெரிது பெரிதாய்  சாதித்தவர்கள் அனைவருக்குள்ளும் இருந்த ஒன்று அவர்கள் அறிந்து பின்பற்றிய ஒன்று சிலர் அவர்கள் அறியாமலேயே பின்பற்றிய ஒன்று அதுதான் எண்ணங்கள், அந்த எண்ணங்கள்தான் அவர்கள் வாழ்வையே மாற்றி போட வைத்திருக்கின்றது.

எண்ணங்கள் என்றால் என்ன: 
எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் ஆசைகள் இவைகள் எல்லாம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் ஒவ்வொரு மாதிரியாக செயல்படும். நீங்கள் விரும்பும் ஒன்றை பெற உறுதியுடன் இருங்கள்,  உங்கள் விருப்பத்தை குறித்து சிந்திக்கும் ஆற்றலை நீங்கள் வளர்த்தால் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறே அடையலாம்.

Source: Internet

விருப்பங்களை அடையலாம்: 
விருப்பங்களை  மந்திரமாக உங்களுக்குள் உச்சரியுங்கள்,  தொடர்ந்து அதனை நினைக்க வேண்டும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி இந்த பிரபஞ்சத்திற்கு உண்டு.

உங்கள் விருப்பங்களை நீங்கள் நினைத்தவாரே   கிடைக்கச் செய்யும் ஈர்ப்பு விசையினை உங்கள் மனதால் நீங்கள் பெறலாம்.

பாஸிட்டாவா இருங்க:
உங்கள் ஆழ்மனதில் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற  விருப்பம் இருக்கின்றது என வைத்து கொள்வோம். அதன்படி நீங்கள் நிச்சயம் ஸ்மார்ட் போன் பெறுவீர்கள். ஆனால் உங்களுடைய எண்ணங்களில் ஆழ்மனதில் நம்பிக்கை அபரிதமாக இருக்க வேண்டும். ஸ்மார்ட் போன்  கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ என்ற வீனான குழப்பங்கள், ஸ்மார்ட் போன் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற எதிர்மறையான சிந்தனையை நினைக்காதிர்கள் அதன்பின் அது உங்களை  வந்தடைவது சிரமம் ஆகும்.

Source: Internet

ஸ்மார்ட் போன் கிடைத்து விட்டது என்ற ஸ்மார்ட் போன் பற்றிய கற்பனையுடன் இருங்கள் அதில் நீங்கள் செய்யும் வேலைகளை கற்பனை செய்து பாருங்கள். அது எந்த தடங்கலுமின்றி உங்களை வந்தடைவதாக நினையுங்கள் நீங்கள் தொடர்ந்து நினைக்கும் பொழுது  உங்கள் ஆழ் மனசக்தி உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற செய்யும் .

எப்பொழுதும் நமது எண்ணங்களின் தெளிவு இருக்க வேண்டும். தமிழ்பாடல் ஒன்று நினைவு இருக்கின்றதா எண்ணிய முடிதல் வேண்டும்,  நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்ற இவ்வரிகளில் உள்ள உறுதியைப் போன்று  எண்ணங்களில் தெளிவான சலனமற்ற உறுதி இருக்க வேண்டும். உறுதியான எண்ணங்கள் எல்லாம் எண்ணியபடி நிறைவேறும்.

எண்ணங்கள் குறித்து மேலும் மேலும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

Post a Comment

1 Comments