இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் போட்டி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ளது, இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.



இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கவாஜா களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய பிஞ்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.  பின் பீட்டர் ஹெண்ட்ஸ்கோம்ப், கவாஜா உடன் ஜோடி சேர்ந்து நல்ல அடித்தளம் கொடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய கவாஜா சதம் அடித்தார். 30 ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அருகில்  எடுத்திருந்தது. கடைசிப் போட்டியில் இமாலய இலக்கை 
நிர்ணயிக்குமா  ஆஸ்திரேலிய அணி இதனை இந்திய அணி எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது அவசியம் ஆகும். 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments