யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

யூனியன் பேங் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை.  181 ஆகும். 

யூனியன் வம்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தின் பெயர்  ஸ்பெசலிஸ்ட் ஆபிசர் பணியிடம் ஆகும்.



கிரெடிட் ஆபிசர் பிரிவில் 122 இடங்களும்  செக்கியூரிட்டி ஆபிசர் பிரிவில் 19 இடங்களும் பாரெக்ஸ் ஆபிசர் பிரிவில் 18 இடங்களும் இண்டிகேரேடு டிரஸரி ஆபிசர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதியும் விருப்பமும்  உள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற 24 வயது முதல் 35 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதியாக  பொருளாதாரப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  எழுத்து மற்றும் சிறந்த பேசும் திறன் இருக்க வேண்டும். 

ஸ்பெசலிஸ்ட் பணிக்கு 3 வருடம்  பொருளாதாரத்துறையில் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மற்றும் வயது வரம்புகள்  மாறுபடும். 

எழுத்து  மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் ஒபிசி மற்றும் பொதுப் பிரிவினர் ரூபாய் 600 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். 

எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். 


மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

 

Post a Comment

0 Comments