5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு!

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இவ்வாண்டு நடக்க வாய்ப்புள்ளது.  கல்வித்துறை அதற்கான  வேலையை தொடங்க தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரத்தில் பாதிக்கப்படுவது 5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தி தேர்ச்சி பெறுவது குறித்து மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக்  பரிசீலினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஐந்தாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைகளை மத்திய அரசிழலில் வெளியிடப்படட்து. வெளியிட்டப்படட் இதழில் நாடு முழுவதும் கட்டாயப் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். 



தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல் 5 அல்லது, 8 ஆம் வகுப்புக்களுக்கான தொடர அனுமதிக்க வேண்டும். தொடக்க கல்வியை மாணவர்களின் திறன் வளர்ச்சி யை உறுதி செய்ய வேண்டியது பள்ளிகளின் கடமையாகும். தொடக்க கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் கட்டாயத் தேர்வு முறையை ரத்து  செய்தால்  கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத்  தெரிவித்தனர். இது அரசியல் பேச்சு இதனால் குழந்தைகளின்  அடிப்படை கல்வித் திறன் குறைவாக இருக்கும். 

கட்டாய தேர்ச்சியால் குழந்தைகளின் அடிப்படை அறிவித்திறன்  கேள்விக்குறியாகிவிடும் ஆகவே குழந்தைகளின் இடைநிற்றல்  பாதிக்கவண்ணம்  ஆலோசித்து செயல்பட வேண்டியது அரசின் கடமை ஆகும்.  5  முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்தி அவர்களை மெருக்கேற்றப்பயன்படுமாறு தேர்வு இருக்க வேண்டும். அதே சமயம் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மனஉலைச்சல் இல்லாமல்  தேர்வு  இருத்தலுடன் திறன் வளர்ச்சியை உறுதி செய்யுமாறு தேர்வு இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

Post a Comment

0 Comments