காஷ்மீரில் சிஆர்பிஎஃப் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு 44 வீரர்கள் மரணம்

காஷ்மீரில் சிஆர்பிஎப்  வீரர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரமரணம் அடைந்தனர் மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் காஷ்மீரில் அடங்கிய 70 வாகனங்களில்   சென்று கொண்டிருக்க ஒரு பயங்கரவாதி மோதிய விபத்தில் வெடிகுண்டுகள் சிதறிய வேகத்தில் நிலைகுலைந்து போயுள்ளது  காஷ்மீர்.  தொடர்ந்து துப்பாக்கி சூட்டினை பயங்கரவாதிகள் இந்திய வீரர்கள் மீது  நடத்தினர். 



நாட்டின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர் அநியாயமாக தீவிரவாதிகளால் பறிக்கப்பட்டது. இது கொடுமையின் உச்சம் . 

இரண்டு நாட்களுக்கு முன்பே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் என  எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடில் அகமது என்ற ஜெய்ஷ்-இ-முகமது  இயக்கத்தில் கடந்தாண்டு இணைந்தான். அவனே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

காஷ்மீர் முழுவதும் இணைய சேவை  முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் இல்லத்தில், நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி,  தேசிய பாதுகாப்பு ஆலோகர் அருண் தோவல் பங்கேற்று பேசவுள்ளனர். 

நாட்டின் அமைதியை குலைத்து நமக்கு அச்சுசுறுத்தல்  கொடுக்கும் இதுபோன்று இயக்கத்தை உரு தெரியாமல் அளிக்க வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம். 

தேசத்தை காத்து நின்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீர அஞ்சலிடயுடன் வணக்கம் செலுத்துவோம். 

இந்திய மண்னை காத்து நின்றவர்கள் மேல் விழுந்த அடியானது நம்மீது  விழுந்தது போலுள்ளது. அரசு இது குறித்து  எடுக்கும் முடிவுக்காக வீரர்களும் நாடும்  காத்துகொண்டிருக்கின்றது. 



தற்கொலைத் தாக்குதலால் நாடே சோகமயமாகியுள்ளது. அனைத்து வீடுகளும்  இது குறித்து கவலை தெரிவித்து அஞ்சலி செலுத்துக்கின்றன. 

இதுகுறித்து  பதிவினை வேதனையுடன் கலந்து  எழுதிய என் படைப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 

ஆஆஆஆஆ.......
தாயே நெஞ்சம் பொருக்குத்தில்லையே இந்த நிலைகெட்ட மனிதம் எண்ணி!,,,,

ஐயகோ என்வீரர்களை கொன்று குவித்த பாவிகளே,, நீங்கள் உண்மையில் மனிதர்கள் தானா,! 
 மானகெட்டத்தனத்தில் இழந்து நிற்பது எங்கள் உயிரை...
வீரம் இல்லா கோழைகளே
நேருக்கு நேர் நின்று தாக்குதல் நடத்த துப்பில்லா துப்பு கெட்ட துடப்பங்களே
முதுகுக்குப் பின் முட்டி மோதி வீரத்தை வீழ்த்திய உங்களை எந்த வரலாறும் மன்னிக்காது!,,,,

எங்கள் தேசத்து கண்ணீர் உங்கள் இயக்கத்தை உருகுலைத்து சிதைக்கும்....
உங்கள் உயிரை உருகுலைத்து நிம்மதியற்ற இறுதிநாட்கள் மட்டும் உங்களுக்கு  மிஞ்சட்டும்...
எங்கள் தேசத்து பெண்கள் குங்குமத்தை எடுத்த உங்களின் உயிரில் ஒரு பொட்டு ரத்தமின்றி வாடிபோவீர்கள்...
இங்கே இறந்து கிடக்கும் என் தேசத்து வீர்விதைகள் வளர்ந்து மரமாவதற்குள் உங்கள் வரலாறு முடித்து வைக்கப்படும்..
இது என் வீரசவால்.....
மனதில் தில்  இருந்தால் சமாளியுங்கள்!

Post a Comment

0 Comments