தமிழ்நாடு காகித ஆலை டிஎன்பிஎல்லில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காகித  ஆலையில் நிரப்படவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளோரின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆபிஸ்,  அஸிஸ்டெண்ட் மேனேஜர், டெப்புட்டி மேனேஜர் போன்ற பணியிடங்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

வேதியியல் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் பல்ப் மற்றும் பேப்பர்  டெக்னாலஜி பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும். 

பிடெக் முடித்திருக்க வேண்டும் அல்லது பேப்பர் டெக்னாலஜி பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்திருத்தல் அவசியம் ஆகும்.


டிஎன்பிஎல்லில் விண்னப்பிக்க 8 முதல் 14 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

34 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  
மாதச் சம்பளமாக ரூபாய் 23,400 முதல் 35,300 வரை பெறலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம். 

சீப் ஜென்ரல் மேனேஜர ஹெச்.ஆர்
டிஎன்பிஎல், 
காகிதபுரம்-639136
கரூர் மாவட்டம், 
தமிழ்நாடு,
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 2.3.2019 ஆகும்.

 அறிவிக்கையின் இணைப்பு பெற கிளிக் செய்து பெறலாம்

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments