பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான இந்து அறநிலைத் துறையில் வேலைவாய்ப்பு!

இந்து அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாடு இந்து அறநிலைத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க  விருப்பமும் தகுதியும் உள்ளோர் முயற்சிக்கலாம். 

தமிழ்நாடு  அறநிலைத்துறையில் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் மற்றும் கிரேடு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் ஆகும். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை  65 ஆகும்.




இந்தி அறநிலைத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது பல்கலைகழக மானியக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


பணியின் பெயர்
எக்ஸிகியூட்டிவ் ஆபிசர்
வயது வரம்பு
35 வயது வரை
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
65
சம்பளம்
ரூபாய் 19,500 முதல் 62000 வரை
பணியிடம்
தமிழ்நாடு முழுவதும்


வயது வரம்பு: 
ஜூலை 25, 2018 இல் 25 வயதிற்குள் 35 வயதுவரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை பணிக்கு எழுத்து மற்றும் நேரடித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். மேலும் புதிதாக தேர்வுக்கு விண்ணபிப்போர் பதிவு கட்டணமாக ரூபாய் 150 செலுத்தி ஐந்துவருடத்திற்க்கு பயன்படத்தக்க டிஎன்பிஎஸ்சி வழங்கும் தனிநபர் ஐடியினை பயன்படுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 31. 12. 2018 ஆகும். 


மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 62,000 வரை பெறலாம். 

Post a Comment

0 Comments