குரூப் 1 தேர்வு எழுத அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகள்!

தகுதிகள் :
குரூப் 1 தேர்வானது  ஆண்டுக்கொருமுறை டிஎன்பிஎஸ்சியால அறிவிக்கப்பட்டு காலிப்பணியிடங்களின்  இருப்பை பொருத்து பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.


தரவரிசையில் முதன்மை வாயந்த இப்பணிக்கு ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் ஒன் தேர்வானது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வாகும்.  மேலும் 21 வயது அடைந்த தேர்வர்கள் தேர்வு எழுத  தகுதியுடைய வயதினர்கள் ஆவார்கள்.



குரூப் ஒன் தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது  அவையாவன முதன்மை, முக்கியதேர்வு, நேரடித்தேர்வாகும். இந்த மூன்று தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கட் ஆப்  போன்ற மார்க்குகளில் முதன்மை பெற்று அரசின் விதிமுறைகளுட்ப்பட்டுள்ள தகுதிவாய்ந்த தேர்வர்கள் பணிவாய்ப்பினை பெறலாம்.

குரூப் 1 தேர்வர்கள்  அந்தந்த பணிகளுக்கு ஏற்ப சில  பணியிடங்கள் முன்னுரிமை மாறுபடும். அக்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அந்தந்த கல்வி பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிவாய்ப்பில் முன்னுரிமை பெறுவார்கள். மேலும் குறிப்பிட்ட பணியிடங்கள்  வேலைவாய்ப்பு முன்னுரிமை குறித்து அறிவிக்கையில்  அறிவிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக சட்டப்படிப்பு, நிதியியல் பிரிவில் சிஏ படிப்பு  போன்ற துறைகளுக்கு  முன்னுரிமை மாற்றம் இருந்தால் அது குறித்து அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே அறிவிக்கையினை முழுமையாகப் படித்துப் பார்த்து தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.

குரூப் 1 தேர்வுக்கு அறிவிக்கப்படும்  பணியிடங்களின் முன்னுரிமையில் தேர்வர்கள் சேர்ந்த பிரிவுகளிலும் இடஒதுக்கீடுகள் குறித்தும் அறிவிக்கையில் படித்துப் பார்த்து தகுகுதியினை  அதிகப்படுத்தலாம். அதாவது  பொதுப் பிரிவினருக்கு 25 பணியிடங்கள் அரசால்  ஒதுக்கப்பட்டுள்ளது எனில் 25 இடங்களில் ஒருவராக இருக்க வேண்டும் என தேர்வர்கள் தங்களது மதிபெண்களை அதிகம் பெற்று அந்த 25 இடங்களின் ஓருவராக இருக்க தங்களை தாங்களே தயார் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க:
 டிஎன்பிஎஸசியின் குரூப் 1 தேர்வு

Post a Comment

1 Comments