சென்னையில் கனமழை பள்ளிகள் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை தொடர் மழை  காரணமாக  சென்னையில் நாளை பள்ளி கல்லுரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனுடன் இணைந்த தமிழகக் கடற்கரையில் வலுவான குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை காரணமாகச் சென்னை சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு வெளியானது.




இன்று காலை பெய்த மழை காரணமாகச்  சென்னையின் அநேக பகுதிகளில் தொடர்ச்சியாந மழை பெய்து வருவதுடன், மேலும் 3  நாட்களுக்குத்  தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்பதன் பொருட்டு 24 மணி நேரத்திற்க்கு மழையுடன்  30-40  கிலோமீட்டர் காற்று வீசக்கூடும்  என்று தெரிவிக்கின்றது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறையானது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

மழையின் வேகம் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம். மெரினாவில் பலத்த காற்று வீசிவருகின்றது. தொடர் மழை தீவிரம் கருதி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  

சென்னை வாசிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அடிப்படைத்  தேவைக்களை இருப்பு வைத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. 

Post a Comment

0 Comments