இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய ரயில்வே பாதுகாப்புத் துறையின் கீழ் என சப் இன்ஸ்பெக்டர்  மற்றும் கான்ஸ்டபிள் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ள சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்
சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்
பணியிடங்கள் மொத்தம்
9739 பணியிடங்கள்
கல்வித் தகுதி
10+பட்டப்படிப்பு  படித்திருக்க வேண்டும்
சம்பளம்
அறிவிக்கையின்படி
விண்ணப்பிக்க கடைசி தேதி
2-07-2018
வயது வரம்பு
20 முதல் 25 வயது வரை பணியிடம் பொருத்து வயது மாறுபடும்
பணியிடம்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.

இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற ஜூன் 1,2018 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். மேலும் ஜூலை 2,2018 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூலை 5 வரை விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.

இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ரூபாய் 500 செலுத்த வேண்டும் எஸ்சி எஸ்டி எக்ஸ் சர்வீஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், பொருளாதார பின்னடைவை கொண்டவர்கள் ரூபாய் 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்ந்தெடுக்கும் முறை:
இந்திய ரயில்வேயில் கான்ஸ்டபிள் மற்றும் இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியானவர்கள் கணினி முறை தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

வயது வரம்பு:
இந்தியன் ரயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 20 முதல் 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிவிக்கையின்படி வயதுவரம்பு சலுகை பெறலாம்.

Post a Comment

0 Comments