வேண்டியதை தரும் அஷ்டமிகால பைரவர் வழிபாடு!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்து மக்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர். வேலையில் முன்னேற்றம் மற்றும்  செல்வ வளம் பெருகுதல், லட்சுமி கடாட்சம் பெருகுதல் ஆகியவற்றை பெறலாம்.

அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். நம்முடைய வேண்டுதல்களை எல்லாம் ஆடிட் செய்பவர் பைரவர்தான். ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.

அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும்பொழுது வேண்டுதல்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.

ஐந்து தனித்தனியாக அகல்விளக்கை எடுத்து   ஒரு அகல் விளக்கை நல்லெண்ணெயும் மற்றும் இன்னொரு அகல் விளக்கில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெயும். அடுத்த விளக்கில்  பசு நெய்யும் அடுத்த அகலில் தேங்காய் எண்ணெயும் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.



ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும. இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

கைலாய நாதர் சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.


எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். மகிழ்ச்சியான தருணத்தை நமக்கு வழங்கி, நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.சிவாலயங்கமுதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.

பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது என்பது ஐதிகம் ஆகும். 



சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். இக்காலங்களில்  ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.

தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது. இந்நாட்களில் பைரவ வழிபாட்டுக்கு முந்தைய நாள் 27 மிளகுகள், ஒரு சிறிய காட்டன் வெள்ளைத் துணியுடன் பொட்டலாமாக கட்டி, சிறிய கிண்ணத்தில்  நல்லெண்ணையில் மிளகு பொட்டலத்தை இரவு  முழுவதும் ஊர வைக்க வேண்டும்.   அடுத்த நாள் பைரவ வழிப்பாடு நாளில் அதனை அகல் விளக்கில் மிளகு பொட்டலத்தை  வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.  இது நன்றாக எரியும். தொடர்ந்து 9 வாரம் தீபம் ஏற்றுதல் சிறப்பாகும்.  பைரவர் வழிபாடு நம்முடைய  விருப்பங்களை நிறைவேற்றும். 

 இந்த மிளகு தீபத்தை செவ்வாய் தோறும் ராகு காலத்தில் ஏற்றுதல் சிறப்பாகும். 

மேலும் படிக்கவும்:

திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரம்மிக்கும் கட்டிடக்கலை!

Post a Comment

0 Comments