சென்னை சூப்பர் கிங்சில் தோனி தொடர்வாரா!

இந்தியாவில்  ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றிகள் பெற்ற டாப்   மிகப்பெரிய அணிகளில் ஒன்றாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இந்தியா சிமெண்ட் உரிமையாளர் சீனிவாசன் இருக்கிறார்.

கடந்தாண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் தலைமையில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மூன்று முறை ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்திய கிரிக்கெட்டின் கூல் கேப்டானாக இருந்த தோனி ஓய்வு குறித்த அறிக்கை வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிஎஸ்கே அணியில் உரிமையாளரான சீனிவாசன் கோவை மாவட்டம் கிரிக்கெட் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டார்.
 
 


அப்போது செய்தியாளர்களிடம் பேசியபொழுது கண்டிப்பாக தோனி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாகவும் அவர் தொடர்வார் என்று ஸ்ரீனிவாசன் கூறினார். இதன் மூலம் நம்ம தல  தோனியின் தலைமை அடுத்த தொடரில் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

Post a Comment

0 Comments