கேரளாவின் கன மழை, அச்சத்தை கொடுக்கும் ரெட் அலர்ட் !..

கனமழையால் கேரளா 10 நாட்களுக்கு மேல்  பெரும் சேதத்தில்  ஸ்தம்பித்துள்ளது.  இது இப்படியிருக்க மீண்டும் வானிலை மைய அறிவிப்பின்படி மீண்டும்  ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்து அச்சத்தில் உள்ளனர்,

 கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழையால் இதனால் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வெல்லத் தண்ணீர் சூழ  முகாம்களில் வசித்து வருகின்றனர்,

வயநாடு மாவட்டத்தில்  மட்டும்  80 இடங்களில் பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  1239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தேவைப்படும் வசதிகளுடன் தங்கியுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட மழைப் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 59 பேர் குறித்து தேடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இறந்த சடலங்கள் மீட்பு பணிகளுடன் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று மழை குறையத் துவங்கியுள்ளது.

கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரண நிதியாக 10,000  கோடி வரை அரசு  தேவைப்படும் என மத்திய அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் 11,159 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.

இதற்கிடையே மலப்புரம் வய்நாடு பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரள முதல்வர் பிரனாய் விஜயன் பார்வையிட்டார். மேலும்  கேரளாவின்- மலப்புரம் கோழிகோடு உள்பட ஐந்து மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எனப்படும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், அலபுழா மற்றும் இடுக்கி போன்ற ஒன்பது மாவட்டங்களில் ம பள்ளி, கல்லுரிகளுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 
வெள்ள நீரில் தங்கள் வீட்டுநிலைமையை சரி செய்ய மக்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மீண்டும் மழை இரண்டு நாட்களுக்கு அதிகரிக்கும் என தகவல்கள்  தெரிவிப்பதால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

கேரளாவுக்கான நிவாரணப் பொருட்களை ஆங்காங்கே மக்கள்  தொடங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments