மத்திய அரசின் ஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!,,

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., மங்களூரு பெட்ரோ-கெமிக்கல்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
 
ஓ.என்.ஜி.சியில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 17 ஆகும். 
 


காலியிட விபரங்களின் தகவல்கள் கிழே கொடுத்துள்ளோம். கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் கெமிக்கல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில்  4 பணியிடங்கள், 
 
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில்  1 பணியிடம், 
மெக்கானிக்கலில் 2 பணியிடங்கள்,
டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் கெமிக்கல் பிரிவில் 2 பணியிடங்கள், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்சில் 2 பணியிடங்கள், 
எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1 பணியிடம். போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதியாக அந்தந்த பாடப் பிரிவில் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு அல்லது மூன்று வருட டிப்ளமோ படிப்பை  முடித்திருக்க வேண்டும்.
 கல்வித் தகுதியில் மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டிய  அறிவிக்கப்பட்ட இறுதி தேதி : 23.8.2019 ஆகும்.

மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விபரங்கள் பெறலாம். : https://www.ompl.co.in/   
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments