இந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

முப்படைகளில் இந்திய கப்பல் படையும் ஒன்றாகும். அதன் தொழில் நுட்ப காரணங்களுக்காகவும், சிறப்பான  செயல்பாடுகளாலும் வீரர்களுக்காகவும் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது.  இந்தியக் கப்பல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

கப்பல் படையில் செய்லர் பிரிவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிரப்படும் பணியிடங்கள்  400 ஆகும். 
 
இப்படையில் இணைய வயது வரம்பாக விண்ணப்பதாரர்கள் 1.4.2000க்கு பின்னரும், 31.3.2003க்கு முன்னரும் பிறந்தவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதியாக மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் முலம் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
 
 
 

 இந்தப் பதவிக்கு தகுதியானோர் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.14600/- வரை பெறலாம்.
 
 பிசிக்கல் பிட்னஸ் டெஸ்ட், மருத்துவத் தகுதித் தேர்வு  ஆகியவற்றில் தகுதியானோர் தேர்வு செய்யப்படலாம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்.205/-ஐ இந்திய கப்பல் படையில் செய்லர் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
 ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கப்பல் படையில்  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி : 1.8.2019
 
தேவைப்படும் தகவல்களை பெற  கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக்  செய்யவும்: https://www.joinindiannavy.gov.in/
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments