பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின்  ஸ்டீல் அத்தார்ட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. செய்ல் நிறுவனத்தில் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். மேனேஜ்மென்ட் டிரெய்னி அட்மினிஸ்ட்ரேசன் பிரிவில் காலியாகவுள்ள 60 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

28 வயதுடையோர் வரையுள்ளோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். 



மேலும் குறைந்தபட்ச உடல்தகுதியும், 150 செமீ உயரமும் கண்ணாடி அணிவதில் சில நிபந்தனைகள் ஆகிய தகுதிகள் அனைத்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

விண்ணப்ப கட்டணமான ரூபாய்  700 செலுத்த வேண்டும், 

ஆன்லைன்  எழுத்து  தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள். சென்னை, திருச்சி ஆகிய இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள  தேர்வு மையங்கள் ஆகும். 

ஜூன் 18, விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

மேலும் தேவைப்படும் தகவல்கள் பெற அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். https://www.sailcareers.com/media/uploads/Final_English_detailed_advt_for_MT_Admn_-2019_2.pdf

மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் அரசு வேலை வாங்க!,,


Post a Comment

0 Comments