மாஸ் காட்டி வென்ற இந்திய ஹாக்கி மகளிர் அணி!...விடா முயற்சியால் விஷ்வரூப வெற்றி!!

 இந்தியாவின் பெண்கள் ஹாக்கி அணியினர் கலக்கல் வெற்றியினை பெற்று தங்களது  மெகா வெற்றியை பதிவு செய்துள்ளனர். சிறப்பு வாயந்த வெற்றியினை நாடே கொண்டாட வேண்டிய தருணம் இது, கிரிக்கெட்டைப் போல் பெருமைப் படுத்தி  ஆதரவு  கொடுக்க வேண்டியது  நமது கடமை ஆகும். தேசத்தின் வெற்றி நமது வெற்றியாகும்.


பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரைஇறுதிப் போட்டியை  இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
இந்திய அணியில் குர்ஜித் கவுர் (22 மற்றும் 37-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்), கேப்டன் ராணி ராம்பால் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் அசத்தலாக செய்து பெருமை படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மற்றொரு அரைஇறுதி போட்டியில் ஜப்பான் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது.
இன்று நடைபெற்ற இறுதி ஹாக்கி  ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை ராணி ரம்பால் முதல் கோலை அடித்து ஆட்டத்தில்  கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்.  பதிலாக ஜப்பான 11-வது நிமிடத்தில் கோல் அடித்தது சவால் விட்டத்து.

45-வது மற்றும் 60-வது நிமிடங்களில் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்து கடும் நெருக்கடியை ஜப்பானுக்கு கொடுத்தார். இதனை அடுத்து இந்தியா 3-1 என ஜப்பானை வீழ்த்தியது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஏற்கனவே இந்தியா 2020 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றது.  மகளிர் அணியின் மகத்தான வெற்றியை நாம் கொண்டாட வேண்டிய தருணம் இது சுவீட் எடு கொண்டாடாடு, இந்தியாவின் வெற்றி மீம்ஸ் போடு மிரட்டு உலகை...

Post a Comment

0 Comments