மத்திய அரசின் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏ.ஏ.ஐயில் செக்யூரிட்டி பெர்சனல், எக்ஸ்ரே ஸ்கீரீனர் போன்ற பணியிடங்கள் மொத்தம் 176 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இப்பணி வாய்ப்பு பெற ஏதாவதொரு பட்டப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம்,  தேர்வு பெறுவோர் தான் சேர்ந்தப் பகுதியின் மொழி அறிவு  கொண்டிருக்க வேண்டும். 

45 வயதுடையோர் வரை விண்ணப்பிக்கலாம்.

ஆண்கள் உடற்த்தகுதியாக 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 157 செ.மீ உயரமும் இருக்க  வேண்டும். 

உடல்த் தகுதி தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள், இறுதியாக இண்டர்வியூ மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். 

விண்ணப்பங்களை ஆன்லைனில்  பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை கிழே கொடுத்துள்ளோம்.

தி சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர்,
ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிட்டெடு,
ஏஏஐசிஎல்ஏஎஸ் காம்பிளக்ஸ்,
டெல்லி பிளையிங் கிளப் ரோடு,
சாஃப்தார்ஜங்க் ஏர்போர்ட்,
நியூ டெல்லி- 110003

மேலும் விவரங்கள் அறிய https://aaiclas-ecom.org/Live/images/ADVT_CHENNAI_AMENDED.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து அறியலாம்.

 மேலும் படிக்க:

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments