நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்க தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாகிறது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஏற்கனவே கூட்டணி பேரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தேர்வு தேதிக்குள்  தங்கள் நிலைப்பாட்டை தெரிவிருவார்கள் போல இருக்கின்றது. 


நாட்டின் மக்களவை தேர்தலை 7 முதல் 8 கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றது

 தமிழகத்தில் கோடை முன்கூட்டியே துவங்குவதால் 2014 தேர்தலைப் போல் தமிழகம்-புதுச்சேரிக்கு முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், மக்களவைத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படவாய்ப்புள்ளது. சிக்கிம் சட்டப்பேரவை ஆயுட்காலம் 2019 மே மாதத்துடனும், ஆந்திரா, ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களின் ஆயுட்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால், அந்த 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும் மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படக்கூடும் என்றும் தேர்தல் ஆணையத்தினர் கூறியுள்ளனர்.



இவ்வாறே  ஆட்சிக்கலைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தமுடியுமா என தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு தேர்தல் தேதிகள்  அறிவிக்கும் நேரத்தில் தமிழகத்தில் அரசிய கூட்டு முயற்சி கூட்டணி பேரங்கள் பெரும் பரப்பரப்பை உண்டாக்குகின்றன. 

திமுக துரைமுருகனும்,   தேமுதிகா சுதீஷ் இருவரும்  பேர பேச்சில்  முரண்பட்டு செயல்பட்டு பேசுவது.  எங்க கூட்டணிக்கு வாங்க என  தினகரன் காத்திருப்பது. அதிமுக பிஜேபி இணைந்து செய்யும் அலைப்பறைகள் எல்லாம் தமிழகத்தின் அனல் பரவுகின்றன.  கோடை வெய்யில் துங்கும் முன் தேர்தல் அலைப்பரைகள்  துவங்கிவிட்டது.  மக்களுக்கு நல்லவேடிக்கை கொண்டாட்டம்தான்.

Post a Comment

0 Comments