அருணாச்சல பிரதேசத்தில் புதிய திட்டங்கள் அறிவிப்பு, சீனா

1962 ஆம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் முடிந்த பிறகு அருணாச்சல்  பிரதேசத்தில் இந்தியா - சீனா  எல்லைப் பகுதியில் இன்னும் சச்சரவு நீடிக்கிறது. 

2017 இல் இரு நாட்டு  எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனா, பதட்டம்  நிறைந்த சூழலை சமாளித்து கடந்துவந்தது இந்தியா. 

சீனா சர்ச்சைக்கூரிய எல்லைப் பகுதியில் இந்தியா புதிய திட்டங்களை தொடங்க  கூடாது என  அறிவித்திருந்தது. 



அருணாச்சலப் பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு திட்டங்களை துவக்கியருந்தார் மோடி, இதனை கண்டித்து அறிவிப்பு வெளியிட்டிருந்ததது சீன அரசு, இதனையடுத்து இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இந்தியா உள்ளது, இதனை அடுத்து இரு நாட்டு  உறவில் சிக்கல் எழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் அத்துமீறல் பலமுறை நிகழ்ந்திருந்த நிலையில் இந்தியா  அமைதி காத்து செயல்பட்டது குறிப்பிடத் தக்கது. சீனாவின் அடுத்த நடவடிக்கையை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற அச்சம் தேர்தல் நேரத்தில் புது குழப்பம் நிலவுமோ என்ற புதுகவலை உருவாகியுள்ளது.

Post a Comment

0 Comments