டிஎன்பிஎஸ்சியின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பட உள்ள முதுகலை  மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 2, 2019 தேதிக்குள்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 19 ஆகும். 

சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட், ஜூனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதச் சம்பளமாக ரூபாய் 35, 400- 1,12, 400 பெறலாம். 


பணியின் பெயர்
சீனியர் டெக்னிக்கல், அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
28-48 வயது வரை
கல்வித் தகுதி
பிஎஸ்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
19
சம்பளம்
ரூபாய் 35,400 - 1,12,400  வரை பெறலாம்
பணியிடம்
தமிழ்நாடு


ஜூலை 1, 2019  தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.   30 வயது முதல் 48 வயது  வரை பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், மாநில  தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம்  வழங்கும்  டிப்ளமோ படிப்பில்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள். 

சென்னை, மதுரை, கோயம்ப்புத்தூர் போன்ற பகுதிகளில் தேர்வு மையம் அமைந்துள்ளது. 

அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. 

டிஎன்பிஎஸ்சியின் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 
 பிப்ரவரி 8, 2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல் 20, 2019


மேலும் படிக்க:

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments