ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் பரப்பும் துகள்கள்!

உலகெங்கும் பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்டி அழகு பார்த்து அக்குழந்தைகளுக்கு பளபளப்பை கூட்ட அம்மாக்கள் பயன்படுத்தும் முக்கிய சாதனங்களில் ஒன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பவுடர் ஆகும்.

இந்தியாவைப் பொருத்தவரை சில ஆண்டுகள்  முன்புவரை இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகம் தன்னகத்தே கொண்டிருந்தது. தற்போது வந்துள்ள சில பிராண்டுகளின் காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர்கள் பாட்டில் மிகச் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் என்றும் குழந்தைகள் அழகை பராமரிக்க பூசப்படும் பவுடர்களில் முதன்மை இடம் வகிப்பது ஜான்சன் பேபி பவுடர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ரிட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு எக்வோரியா என்பவர் புகார் அளித்திருந்தார். அவர் தெரிவித்த புகாரில் கருப்பை புற்றுநோய்க்கு காரணம் சிறுவயது முதல் பயன்படுத்திய ஜான்சன் பிராண்ட் பவுடர்கள்தான் காரணமாகும் என தெரிவித்தார்.  அவருக்கு ஏற்பட்ட  அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் 417 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டினை அப்பெண்ணிற்கு வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து ரீட்டர்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் ஜான்சன் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு பவுடரின் மீது முன்வைத்துள்ளது.
 


டெக்ஸாஸின் டார்லின் கார்கர் என்பவர் பள்ளி நடத்தி வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது . பரிசோதனையில் அவருக்கு மிசோதெலிமா என்னும் நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் தோள்களை பாதித்து  ஏற்படக்கூடிய இந்த புற்றுநோயானது தொழிற்சாலையில் சேர்ந்தவர்களுக்கு அதிகம் பாதிக்கும், ஆனால் கார்லினோ ஒரு பள்ளி நிர்வாகி அவருக்கு இந்த நோய் ஏற்பட காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் அவர் பயன்படுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. டார்லின் தொடர்ந்த வழக்கில் வழக்கு முடிவதற்கு முன்பே அவர் இறந்து போனார். மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது மேலான வழக்குகள் இருப்பதனை கண்டுபிடித்தது. இந்த தகவலை வெளியிட்டது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜான்சன் நிறுவனம், ரீட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்று பதில் உரைத்தது.

பொதுவாகவே நாம் பயன்படுத்தும் பவுடர் வகைகள் தோலின் வியர்வை துவாரத்தை மூடி கொள்வதால் தோலுக்குரிய ஆற்றல்கள் கிடைப்பதில்லை. மேலும் வியர்வை போன்ற கழிவுகள் தடுக்கப்பட்டு உடலில் அது ஸ்லோ பாய்சன் ஆக செயல்பட்டு நாளடைவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்யும் பெரியவர்களுக்கு அந்த கதி என்றால் சிறு குழந்தைகளுக்கு எதுவும் நடைபெறலாம் ஆகையால் இதுகுறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை இருக்கவேண்டியது அவசியமாகும்.
 
நம் முன்னோர்கள் சிறுவயது முதலே மஞ்சள், வசம்பு, நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கள்ள மாவு, பயித்த மாவு ஆகிவற்றை பயன்படுத்தினார்கள். இயற்கையாக பயன்படுத்தும் பொருட்களினால் உடலுக்கு ஆரோக்கியம் அழகும் எப்போதும்  கிடைக்கும்.

Post a Comment

0 Comments