டிஎன்பிஎஸ்சியின் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சியின் கூட்டுற சங்கத்தில்  ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காலியாகவுள்ள 30  பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமுள்ளோர்  விண்ணப்பிக்கலாம். 


கூட்டுறவு சங்கத்தின் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடமானது ஜூனியர் இன்ஸ்பெக்டர் ஆகும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள் 30 பணியிடங்களுக்கு எஸ்சி/ எஸ்டி போன்ற பிரிவினர்கள்  பத்தாம் வகுப்பு அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அல்லது அண்ணாமலை மற்றும் சென்னை, மதுரை பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்கள் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


பணியின் பெயர்
ஜூனியர் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
 18 முதல் 45 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
30
சம்பளம்
ரூபாய் 20,600- ரூபாய் 65,500
பணியிடம்
தமிழ்நாடு    முழுவதும்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டுறவு சங்க பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 45 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்
இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 20,600 முதல் ரூபாய் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுமுறை: 
விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதிப் படைத்தவர்கள் தேர்வு செய்யப்படலாம் 

விண்ணப்ப  கட்டிணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். மேலும் முதல் முறையாக  தேர்வு எழுதுவோர் எனில் டிஎன்பிஎஸ்சியின் ஐந்து வருடங்களுக்கு உபயோகிக்க கூடிய பதிவு ஐடி உருவாக்கி ரூபாய் 150 பதிவு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் ஐடி பாஸ்வோர்டு பெற்று அதனை ஐந்து வருடங்களுக்கு  விதிகளின்படி உபயோகிக்கலாம். 

டிஎன்பிஎஸ்சியின் தேர்வு எழுத தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் அக்டோ[ர 23, 2018 முதல் 21-11-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
 மேலும் தேர்வானது ஒரேதாளாக பொதுஅறிவு பகுதி மட்டும் கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும் நாள், ஜனவரி 27,2019 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும்.

 அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை பெற கிளிக் செய்யவும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க  லிங்கை இங்கு கொடுத்துள்ளோம் கிளிக் செய்யவும். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments