கலைகட்டும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்!

ஜூலை 26, 1999  கார்கில் விஜய திவாஸ் போர்ல் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தி சிலேட்குச்சி வழங்கும் கவிதை!

கலைந்து போன கார்மேகம் உரைந்த பனிமலையிலிருந்து உரக்க சத்தமிட்டுகொண்டு போரினை தொடங்கியது இந்திய ராணுவம்!

 
எல்லையிலே எவரும் அறியாமல் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்
கொல்லையிலே ஆடு மாடுகள் ஓட்டிய சாமனியன் ஒற்று துணை கொண்டு சாதித்த இந்திய ராணுவம் வாழ்க!.

இந்திய  கிராமத்திலிருந்து  இருந்து இமயத்தை காக்க சென்ற இந்திரனை  அனுப்பிய
இந்திராணித்தாய்  எல்லையிலே கண்ணுரங்காதே ராசா  தாய் நாட்டுக்கு எதாச்சுண்ணா
நீதான் கண்ணு பொறுப்பு  ஊர்எல்லையிலே அய்யனாரய்யா மாறி நாட்டெல்லையில நீ நில்லு கண்ணு என்று  திலகமிட்டு அனுப்பினாள் வீரத்தாய்!

எல்லை தாண்டி அத்துமீறிய பாகிஸ்தான்
படைகளின் அட்டகாசத்தால் கட்டுக்கடங்கா குளிரிலும
ஜல்லிக்கட்டு காலையைப் போல் துள்ளி தூக்கியடித்தது
 இந்திய ராணுவம்..!

டைகர்  மலையில் இருந்து  இந்திய டைகர்களின்
தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தலைத்தெரிக்க
ஓடியது பாகிஸ்தான்..!

உலக நாடுகள் வந்து ஊர் பஞ்சாயத்து பேசியபொழுதும்
உறுதியுடன் போரை நடத்துவோம என்று  கர்ஜித்தார் அன்றைய இந்திய பிரதமர்!

ரத்த சுண்டவைக்கும் பனியையும் 
பொருட்படுத்தாமல் பாகிஸ்தான்
படையை புரட்டி எடுத்தது பாரதப்படை!
அய்யோ போதும் நிறுத்துங்க என்று பாகீஸ்தான் அலறியபொழுதும் 
கட்டுக்கடாங்கா எரிமலையைப் போல் கடந்து போனது  பாரதப் படை!

தாரை தப்பட்டை கிளிய தரைப்படை அடித்து நொருக்கிக் கொண்டிருக்க
வானத்திலே வடமெடுத்து நின்று வளைத்து  வளைத்து தாக்கிய  வான்படை என முப்படைகளும் நடத்திய தாக்குதலால் நிலைதடுமாறி பின்னோக்கி ஓடியது பாகிஸ்தான். 

இந்திய ஆக்ரோசத்தில் ஆடிப்போன பக்கத்து நாட்டான்
ஆளைவிடுங்கடா சாமி என அலறியப்படி ஓடிய கார்கில் வெற்றி தருணம் எப்பொழுதும் நம்மை  மெய்சிலிர்க்கச் செய்யும் வெற்றியாகும்!

ஆயிரக்கணக்கில் இந்திய தரப்பில் உயிரிழந்த வீர்ர்களுக்கும்
விண்ணை முட்டும் மலையை நம் மண்ணுக்கு சொந்தமாக்கிய  வெற்றி வீரர்களுக்கு எந்நாளும் பொன்னாளே!
சரித்திரத்தில் சரிநிகராய் நின்று போட்டித் தரும் நெஞ்சுரம் கொண்ட இந்திய ராணுவத்தினரை  தலைவணங்கி வெற்றியை கொண்டாட்டும்  சிலேட்குச்சி!.

Post a Comment

0 Comments