இன்ஜினியரிங் பட்டதாரிகளே வேலை வேண்டுமா.. பெல் நிறுவனத்தில் வாய்ப்பு!..

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்டிரானிக் நிறுவனத்தின் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாரத் எலக்டிரானிக் நிறுவனம் அறிவித்துள்ள பணியிடங்கள் பெங்களூரு, பஞ்ச்குலா பகுதிகள் ஆகும். 


பணியிடங்கள் விவரம் : 
துணை இன்ஜினியர் =20 காலிப்பணியிடங்கள்
துணை இன்ஜினியர் மெக்கானிக்கல்= 15 காலிப்பணியிடங்கள்
துணை இன்ஜினியர் எலக்டிரானிக்= 42 காலிப்பணியிடங்கள்
துணை இன்ஜினியர் = 09  காலிப்பணியிடங்கள்

பணியின் பெயர்
துணை இன்ஜினியர்
வயது வரம்பு
21 வயது முதல் 26 வரை
கல்வித் தகுதி
இன்ஜினியரிங்  பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்கள் எண்ணிக்கை
87
சம்பளம்
ரூபாய் 40,000 முதல் 1,40,000
பணியிடம்
பெங்களூர், பஞ்ச்குலாவில் பணியிடம் கொண்டது
 
கல்வித்தகுதி: 
பொறியியல் துறையில் குறிப்பிடப்பட்டுள்ள துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க  வேண்டும்.

வயது வரம்பு: 
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பம்: 
இன்ஜினியரிங் துறையில் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள  பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 
மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுஆகிய தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். 

பெல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்: 11.07.2018 


மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments