சிவில் ஜட்ஜ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !..

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 2018 ஆம் ஆண்டுகான சிவில் ஜட்ஜ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளோர் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு சிவில் ஜட்ஜ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் ஏப்ரல் 9,2018 ஆகும்.

விண்ணப்பிக்க கடைசிதேதியாக மே7 என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சியால் நிரப்படும் சிவில் ஜட்ஜ் பணியிடங்கள் எண்ணிக்கை -320 ஆகும். 


கல்வித்தகுதி:
டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சிவில் ஜட்ஜ்  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கவுன்சிலில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 
பிராக்ஸ்டீஸ் அட்வகேட்/ பப்ளிக் பிராஸ்கியூட்டர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் அட்வகேட் மற்று பிராஸிக்யூட்டராக பணியாற்றி 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
இந்தாண்டு சட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பார்கவுன்சிலில் என்ரோல் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
அறிவிப்பு வெளியிட்ட நாளில் சட்டம் பயின்று மூன்று வருடம் முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது:

  1. ஜூலை 7, 2018 இல் 25 முதல் 40 வயது, 35 வயது, 27 வயது என பிரிவுகளுக்கு ஏற்ப சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. 
  2. விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 எஸ்சி/எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டும். 
  3. ஒபிசி பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
  4. தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

சம்பளம்:
சம்பளத் தொகையாக ரூபாய் 27700 முதல் 4770 வரை பெறலாம்.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடக்க நாள்-9 ஏப்ரல் 2018
விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதிநாள்- ஆகஸ்ட் 11, 2018
முதன்மை தேர்வு நாள் : ஜூன் 9, 2018
முக்கிய தேர்வு நாள்: ஆகஸ்ட் 11, 2018 

டிஎன்பிஎஸசி அறிவிக்கை லிங்கினை கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து முழுமையாக படிக்கவும்.



டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்

Post a Comment

0 Comments