தமிழ்நாட்டில் ஒரே நாளில் 57 பேரை தாக்கிய கொடிய கொரோனா வைரஸ்!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்  கிட்டத்தட்ட 192 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்து இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பாரத பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மிகவும் போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடங்கி, இன்று மட்டும் 57 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 124 ஆக உயர்ந்துள்ளது. நன்றி !

Post a Comment

0 Comments