யார் இந்த நோஸ்ட்ரோடாமஸ்...?



யார் இந்த நாஸ்ட்ரோடாமஸ்...? என்று யாராவதிடம் கேட்டால் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று எளிதாக கூறிவிடுவார்கள். தீர்க்கதரிசி என்றால் புரியும்படி கூற வேண்டுமென்றால் எதிர்காலத்தை குறிப்பால் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் என்றுதான் பொருள். அது ஒருவருடைய எதிர்காலமாக இருக்கலாம் அல்லது உலகத்தில் எதிர்காலத்தில் நடக்க இருப்பதாக கூட இருக்கலாம். உங்களிடம் வந்து எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கும் என்று கூறினால் யாராவது நம்புவீர்களா? யாரும் அதனை கட்டாயம் நம்ப மாட்டோம். ' நாளை' இது நடக்கும் என்று உறுதியாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் நாஸ்ட்ரோடாமஸ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நாட்களில் நடக்க இருப்பதை கூட தன்னுடைய குறிப்புகளால் எழுதிவைத்து சென்றுள்ளார். 





அவர் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மருத்துவர். அந்தக் காலகட்டத்தில் அவர் வைத்தியமும் ஜோசியமும் மக்களுக்கு கூறி வந்திருக்கிறார். இவர் 1503 ல் பிறந்திருக்கிறார். இவர் 1566 மரணமடைந்தார் என்று வரலாறு கூறுகின்றது. இவரின் தீர்க்கதரிசனம் தன்னுடைய மரணத்தையே கூறுமளவிற்கு இருந்திருக்கிறது. அவர் எதையும் நேரடியாக கூறுவதில்லை. அதற்கு மாறாக குறிப்பால் தான் அவர் உணர்த்துவார்.

அவரிடம் வழக்கமாக வரும் மக்களிடம் அவர் கூறியது என்னவென்று தெரியுமா...? " நாளை நான் இருக்க மாட்டேன் வராதீர்கள்", என்று கூறியுள்ளார். மறுநாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.



இவர் எழுதிய குறிப்புகளில் உள்ள பல நிகழ்வுகள் உலகத்தில் உண்மையாக நடந்தது என்பதுதான் விளக்கமுடியாத வியந்து பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. இது போன்ற எதிர்கால தகவல்களை பலர் கூறியிருந்தாலும் அவர்களில் பலருடைய குறிப்புகள் பலிக்காமல் இருந்ததால் பெரிதாக பார்க்கப்படவில்லை. ஆனால் இவருடைய குறிப்புகள் அப்படி இல்லை. அவர் அப்படி என்னதான் கூறினார் என்று இனி இப்பதிவில் பார்ப்போம்.


முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் நடக்கும், இரண்டாம் உலகப் போரில் எந்த நாடு வெற்றி பெறுகிறதோ அந்த நாடு அடுத்து நூறு வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும், இன்றைய ஜெர்மனி நாட்டில் கொடூரமான ஒரு தலைவன் தோன்றுவான் அவன் மூலமாகவே அந்த நாடு தோல்வியடையும் மேலும் இந்தியா யாருடைய ஆளுகையின் கீழ் செல்லும் என்றும் பின்னர் எப்பொழுது சுதந்திரம் அடையும் என்பதையும் கூறியிருக்கிறார்.

பின்னர் மெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் பற்றிய குறிப்புகளும் அந்த நாட்டை ஒரு கருப்பர் ஆழ்வார் என்றும் அவரே கடைசி கறுப்பின தலைவன் என்றும் அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்வருக்கு மர்ம நோய் ஒன்று தாக்கும் என்றும் குறிப்புகளில் இடம்பெற்றிருந்தது. இது மட்டும் இல்லை அவர் கூறிய இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நடந்துள்ளன.

அமெரிக்காவில் உருவாக இருக்கும் ஒரு அரக்கனால் மூன்றாம் உலகப்போர் மூளும் என்றும், உலக அமைதியை நிலைநாட்ட ஒருவன் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் தோன்றுவான் என்றும் குறிப்புகள் இருக்கிறது என்று வரலாறு கூறுகிறது. அதுமட்டுமின்றி நம் இந்தியாவில் தோன்றி இருக்கும் அவனால் மூன்றாம் உலகப் போர் முடிவுக்கு வரும் என்றும் ரஷ்ய இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்து உலகத்தை ஆழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இவையெல்லாம் 2020 தாண்டி தான் நடக்குமாம். அப்படிப்பார்த்தால் இனி வரும் காலங்களில் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை இவர் கூறியது அனைத்தும் பலித்திருப்பதையும் அறியும்போது இவருடைய தீர்க்கதரிசனம் இனியும் தொடருமா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப்பதிவில் கூறிய குறிப்புகள் சிறிதளவு தான். அவருடைய எதிர்கால குறிப்புகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அது எல்லாம் நடக்குமா? என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

0 Comments