பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மைசூரில் உள்ள பாபா ஆராய்ச்சி மையத்தில் நிரப்படவுள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியும் விருப்பமுள்ளோரிடமிருந்து  பெறப்படுகின்றது. 

பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் டிரைவர்-கம்-பம்ப்-ஆப்ரேட்டர்-கம் -ஃபையர்மேன்  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 3 ஆகும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 21, 700 வரை பெறலாம். 



அறிவியல் பாடத்தை பாடமாகப் படித்து பிளஸ் டூ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலுடன் ஃபையர் ஃபைடிங் எக்யூப்மெண்ட்ஸ் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

உடற்திறன் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி இணைப்பு: 
அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர்-3, பாபாஆட்டோமிக் ரிசர்ச் செண்டர், பி.பி.நெம்பர்1, யெல்வால் மைசூரு- 571130

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள இறுதி மே 31, 2019 ஆகும். 


மேலும் படிக்க:

நிதி ஆயோக்கில் வேலை பெற விண்ணப்பியுங்கள்!

Post a Comment

0 Comments