இந்தியன் நேவியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசில் கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் எஜூகேசன் பிராஞ்ச்ச் டெக்னிக்கல் பிராஞ்சில் பணியாற்ற பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 121  ஆகும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க  திருமணமாகாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் செலுத்தலாம். 



எக்ஸிகியூட்டிவ், டெக்னிக்கல் பிரிவு, கல்விப் பிரிவுகளில் பணிவாய்ப்பு இருக்கும். 

19 1/2 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு 1995 முதல் 2001 வருடகாலத்தில்  பிறந்திருக்க வேண்டும். 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 60% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

157 செமீ உயரமும் அதற்கேற்ற எடையும் இருப்போர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஸ்டாப் செலக்சனின் கீழ் நடத்தப்படும் முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணறிவுத் தேர்வுகளில் கலந்துரையாடி உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

wwe.joinindian navy.gov.in என்ற தளத்தில் தேவைப்படும் தகவல்களை கிளிக் செய்து பெறலாம்.

மேலும் படிக்க:

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Post a Comment

0 Comments