பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பயங்கரம்!

பொள்ளாச்சி இயற்கை எழில் பொங்கும் இடம், சூட்டிங் ஸ்பாட் நிறைந்த பகுதி  பெரிய அளவில் வளர்ச்சி பெற்ற நகரம் போல் இருக்காது ஆனால் எங்கு திரும்பினாலும் வயல் வெளிகள் நிறைந்து காணப்படும். பாரம்பரியமிக்க வீடுகளும் தோட்டங்கள் வயல்வெளிகள் போல் மக்களும்  பழமைகள் நிறைந்து புதுமைகள் ஏற்றுக் கொள்ளும் மக்கள் வாழும் பகுதி ஆகும்.

இப்படி  சாதரண இயற்கை எழில் கொஞ்சும் இந்த  ஊரில் சமீபத்தில் பெண்களை துன்புறுத்தி வன் கொடுமை செய்து அவர்களிடம் பணம், நகை பறித்து  பெரும் சிக்கலை பெண்களுக்கு எதிராக செய்த கும்பல் ஒன்று போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசியல் சாயங்களும் பூசப்பட்டுள்ளன.


எதுவானாலும் போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின்புதான் தெரியவரும். குற்றவாளிகளான திருநாவுக்கரசு 29,  சபரிராஜன்25 வயது,  சதிஷ் 29 வயது, வஸந்த 24, பார் நாகராஜ் அதிமுக வயது கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன் பின்னனியில் துணை சபாநாயகர் மகன்கள் உள்ளதாக தகவல்கள் உள்ளனர்.

பொள்ளாச்சியில் 19 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி எடுக்கப்பட்ட விடியோக்களின் இணைப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

பொள்ளாச்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் பணக்காரர்கள்  கும்பல்கள் செய்த இந்த கொடூரமான பெண்களுக்கு எதிரான செயல்கள் பெரும் அளவில் பாதிப்பை உண்டு செய்துள்ளது. 

எஸ்பி, டிஎஸ்பி  பதிவயிலுள்ளோர் இதுகுறித்து  நடவடிக்கைகள் எடுக்க தாமதித்துள்ளனர். அரசியல், பணம் படைத்த  மனித  குணம் சிதைத்து போன வக்கிர பேய்களின் இந்த கொடூர தாக்குதல் கண்டிக்க தக்கது ஆகும்.  இதனை வைத்துப் பார்த்தால்  இந்த கொடூரத்தைப் பார்த்தால்  தேசம் எங்கே போய்கின்றது இந்த தேசம் இன்னும் என்ன ஆகும்.  

பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பெயரளவில் கூட இல்லை என்பதுதான் கொடூரம். நாடு எங்கே போய்கின்றது நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கின்றோமா, கிட்டத்தட்ட 1000க்கு மேல் வீடியோக்கள்  செல்போனில் இருக்கின்றன என்ற தகவல்கள் கிடக்கின்றன.  

தேசத்தில் சட்டங்கள்   கடுமையாக இருக்க வேண்டும்.
காஸ்ட்லீ கேமராக்கள் மற்றும்  பெரும்பணக்காரத்தனமான  மொபைல் போன்கள் பயன்படுத்தியுள்ளனர்.

1000 கணக்கான  விடியோக்கள் 250க்கும் மேல் பெண்களின் வீடியோக்கள்  வைத்து பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளனர.

Post a Comment

0 Comments