தமிழக வனத்துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 564 ஆகும். 

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.  தமிழ்நாடு வனச் சீருடை பணியாளர்  தேர்வுக் குழுமம் வெளியிட்ட குறிப்பில் வனத்துறையில்  பணியிடம் பெற விருப்பமும் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். 



மொத்தம் அறிவிக்கப்பட்ட வனத்துறை பணியிடங்கள் 564 இல் 99 பணியிடங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினருக்கு வழங்கப்படுகின்றது. 

கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாதச் சம்பளமாக ரூபாய் 16, 600 முதல் 52, 400 வரை மாத ஊதியம் பெறலாம். 

 21  வயது முதல் 30 வயதுள்ளோர் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் தேர்வு
சான்றிதழ் சரிபார்பு 
உடல் தரநிலைகள் சரிபார்ப்பு
என்டியூரன்ஸ் டெஸ்ட் மூலம் இறுதி முடிவுக்கானத் தேர்வு

தேர்வு கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாகப் படித்துப் பார்த்து  தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 1 வதுவாரம் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். 


ஆன்லைனில்  விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3 வது வாரம்   என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு தேதி ஜூன் 4 வது வாரம் இருக்கும். 
விண்ணபிக்கும் முன்பே அறிவிக்கை கிடைத்துவிட்டது இப்பொழுது தொடங்கினால் கூட  விண்ணப்பிக்கும் முன்பே சிறப்பாக தேர்வை எதிர்கொள்ளலாம். 

தேர்வு நடக்கும்  ஜூன் மாதம் உங்களுக்கு வெற்றி உறுதியாகிவிடும். 



 மேலும் படிக்க:

Post a Comment

1 Comments