சென்னை திரும்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் என தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 18ம், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நல பிரச்னைக்கு சிகிச்சைக்காக மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து பிப்ரவரி 16 ஆம் தேதி  சென்னை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


 தேமுதிக கொடிநாள் விழாவில் பேசிய விஜய பிரபாகரன், விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது. சமூகவலைதளங்களில் வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம்.  வதந்திகளை தவிர்த்துவிடுங்கள் தந்தை விஜயகாந்திற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார். இந்தியா திரும்பியதும், விரைவில் கட்சிப் பணிகளை அவர் மேற்கொள்வார். தொடர்ந்து தேர்தல்  தொடர்பான நடவடிக்கையில்  ஈடுபடுவார், கூட்டணி குறித்து அப்பொழுது அறிவிப்பார் என்றார்.
சென்னை வரக்கூடிய  விஜயகாந்துக்கு   உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என தேமுதிக-வினர் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியாகி வரும் சூழ்நிலையில் விஜயகாந்த் இந்தியா திரும்புவது முக்கியத்துவம் பெறுகிறது.

Post a Comment

0 Comments