தேர்தல் பிரச்சாரம் திருப்பூர் வருகை தரும் மோடி!

திருப்பூருக்கு  பாரதப் பிரதமர் மோடி அவர்கள்நாளை  வருகை தருகின்ரார். 

திருப்பூரில் அடுத்த பெருமாநல்லூரில் வரும் ஞாயிற்றுகிழமை அரசு விழா மற்றும் பாஜக தேர்தல்  பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இவ்விழாவில் மோசி பல்வேறு புதிய திட்டங்களை காணொலொ மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் போன்றோர்களும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர், 

திருப்பூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். 



பிரதமர் ஆந்திராவில் விஜயாவாடவில் இருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்று கிழமை பிற்பகல் 12. 55 மணிக்குப் புறப்பட்டு 2.35 மணிக்கு கோவையை  அடைந்து. 3.5க்கு திருப்பூர்  சென்றடைகிறார். சுமார் 2000க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

மோடி வருகையையொட்டி  நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments