சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா!

சென்னயில் சிறுவழக்குகள் நீதிமன்றத்தில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையினைப் பணியிடமாக கொண்ட சுருக்கெழுத்தாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அமினா, அலுவலக உதவியாளர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த அறிவிக்கப்பட்ட பணியிடங்கள்  எண்ணிக்கை 74 ஆகும். 

கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான உயர்கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும்.அறிவிக்கையில்   தெரிந்து கொள்ளுங்கள். 



மாதச் சம்பளமாக ரூபாய் 20,600 - 65,500  பணியிடங்களுக்கு வரை பெறலாம்.

 18 வயது முதல் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தை இணையத்தில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றெப்பம் 
செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைமை நீதிபதி, 
சிறுவழக்குகள் நீதிமன்றம், 
உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை-104

மார்ச் 8, 2019  ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments