டிஎன்பிஎஸ்சியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. டிஎன்பிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள அருங்காட்சியத் துறையில் மேற்பார்வையாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 ஆகும்.

 மாதச் சம்பளமாக ரூபாய் 36,700- 1,16,200 வரைப் பெறலாம். 

விலங்கியல் அல்லது தாவரவியல், ஜியாலஜி அல்லது இந்திய தொல்லியல்   துறையில் இவற்றில் ஏதேனும்  பாடத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 



18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிவாய்ப்பு பெறுவார்கள். 

பணியின் பெயர்
அருங்காட்சியக மேற்பார்வையாளர்
வயது வரம்பு
அறிவிக்கையின் படி
கல்வித் தகுதி
அறிவிக்கைபடி முதுகலைப் பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
4
சம்பளம்
ரூபாய் 36,700- 1,16,200 வரை பெறலாம்
பணியிடம்
தமிழ்நாடு


விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள் பிப்ரவரி 24, 2019 ஆகும்

தேர்வு தேதி மே 19, 2019 ஆகும். 
மேற்பார்வையாளர் பணிக்கு இரண்டுதாள்களை ஒரே நாளில் காலை, நண்பகல் என பிரித்து தேர்வு எழுத வேண்டும். 

தாள் 1 பாடத்திற்கான  தாள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 

தாள் 2 பொது அறிவு தாள்  பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை 

விணப்ப கட்டிணமாக ரூபாய் 150 பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் விண்ணப்ப கட்டிணம் செலுத்த வேண்டியதில்லை. 

அறிவிக்கையை முழுமையாகப் படித்துப் பார்த்து தகுதியானவர்கள்  ஆன்லைனில் தேவைப்படும் தகவல்களை முழுமையாகக் கொடுத்து விண்ணப்பிக்கலாம். 



மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓன்ஜிசியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு

வேலைவாய்ப்பு செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் 

Post a Comment

0 Comments