மத்திய சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், நிலக்கரி நிறுவனத்தில்   வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம். 

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 370 ஆகும்.  ஜூனியர் ஓவர்மேன்-149 பணியிடங்கள், மைனிங் சர்தார்-201,  டெபுடி சர்வேயர்-20 பணியிடங்கள் போன்ற பிரிவுகளில்  அறிவிக்கப்பட்டுள்ளன. 

எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விதிமுறைப்படி சம்பளத் தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் துறையில் மைன் இன்ஜினியரிங், டிப்ளமோ படிப்பு, மைனிங் சர்தார், மைன் சர்வேயர் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 10, 2019 ஆகும். 



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments